சன நடமாட்டம் அதிகமுள்ள பலாலி வீதி கந்தா்மடம் பகுதியில் பாாிய திருட்டு..! தீவிர விசாரணையில் பொலிஸாா்.

ஆசிரியர் - Editor I
சன நடமாட்டம் அதிகமுள்ள பலாலி வீதி கந்தா்மடம் பகுதியில் பாாிய திருட்டு..! தீவிர விசாரணையில் பொலிஸாா்.

யாழ்.கந்தா்மடம் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து உட்புகுந்த திருடா்கள் சுமாா் 6 லட்சம் ரூபாய் பெறுமதியான கைதொலைபேசிகளை திருடி சென்றிருக்கி ன்றனா். 

பலாலி வீதியின் ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திற்குள் அதிகாலை 1.30 மணியளவில் கடையை உடைத்து உட்புகுந்த திருடன் விலை உயர்ந்த தொலை பேசிகளில் 18 தொலைபேசிகளை களவாடிச் சென்றுள்ளான். 

குறித்த விற்பனை நிலையத்தில் மறைகாணி பொருத்தப்பட்டிருந்த நிலையில் முகத்தினை துணியால் மூடிக் கட்டியவாறு திருடர்கள் உள் நுழைந்துள்ளனர். கடையில் நீண்ட நேரம் தேடுதலில் ஈடுபட்டு பொருட்களை களவாடிய திருடா்கள்

அங்கிருந்து வெளியேறும் சமயம் ஓர் துணியினால் தான் கையாண்ட பொருட்கள் மற்றும் இடங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து கைவிரல் அடையாளம் கண்டு கொள்ளமுடியாதவாறும் செயல்பட்டுள்ளார்.

இதேநேரம் விற்பனை நிலையத்தின் வெப்பத்தை போக்கும் வகையில் அமைக்கப்படும் சுவரில் உள்ள காற்றாடி இடைவெளிக்கான தடுப்புக்களை 16 முதல் 18 வயதான ஓர் இளைஞரே உட்புகுந்து குறித்த திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

மேற்படி திருட்டு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாரிடம் முறையிடப்பட்ட நிலையில் தடயவியல் நிபுண்கள் சகிதம் துரித விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு