பிரதமா் செயலகத்திலிருந்து வந்த அதிரடி உத்தரவு..! யாழ்ப்பாணம்- மானிப்பாய்- காரைநகா் வீதி புனரமைக்கப்படவுள்ளது.

ஆசிரியர் - Editor I
பிரதமா் செயலகத்திலிருந்து வந்த அதிரடி உத்தரவு..! யாழ்ப்பாணம்- மானிப்பாய்- காரைநகா் வீதி புனரமைக்கப்படவுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் மிக நீண்டகாலம் புனரமைபின்றி காணப்பட்ட யாழ்ப்பாணம்- மனிப்பாய்- காரைநகா் இடையிலான வீதியை உடனடியாக புனரமைக்குமாறு பிரதமா் அலுவலகத்தின் செயலாளா் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாா். 

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பிரதமமந்திரி ரணில்விக்கிரமசிங்க யாழ்.செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கூட்டத்தின் போது காரைநகர் பிரதேசசபை தவிசாளரினால் யாழ் 

மானிப்பாய் காரைநகர் வீதி அபிவிருத்தி, காரைநகர் பிரதேச சுற்றுவட்ட வீதி அபிவிருத்தியை வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாக 2019இல் ஆரம்பித்து மக்களின் இலகுவான போக்குவரத்துக்கு உதவுமாறு கோரியிருந்தார்.

இதன் பிரகாரம் பிரதமர் அலுவலகத்தின் செயலாளர் யாழ் மானிப்பாய் 
காரைநகர் வீதி மற்றும் காரைநகர் பிரதேச சுற்றுவட்ட வீதியை உடன் மீளப்புனரமைப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு 

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவருக்கு கடிதம் மூலம் பணிந்துள்ளார். மேற்படி கடிதத்தின் பிரதிகள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், காரைநகர் பிரதேசசபை தவி சாளர் வீ.கேதீஸ்வரதாஸ் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு