பலாலியில் இருந்த விசாகப்பட்டினத்துக்கு சேவையில் ஈடுபடவுள்ள FITS AIR விமானம்..!

ஆசிரியர் - Editor I
பலாலியில் இருந்த விசாகப்பட்டினத்துக்கு சேவையில் ஈடுபடவுள்ள FITS AIR விமானம்..!

கொழும்பு- இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, இலங்கையின் தனியார் துறை விமான நிறுவனமான பிட்ஸ் எயர் (FITS AIR) நிறுவனம், முதலாவது வெளிநாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

இரத்மலானையில் இருந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கான இந்த விமான சேவை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பலாலி, மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்ததும், 

இங்கிருந்து பயணிகள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், பிட்ஸ் எயர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதேவேளை செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு இரத்மலானையில் இருந்து புறப்பட்ட (FITS AIR) நிறுவனத்யின் 70 ஆசனங்களை உடைய

 ATR72 விமானம் காலை 9.10.மணியளவில் விசாகப்பட்டினத்தை சென்றடைந்தது.

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு