இந்த இடத்தில் உங்களிடம் நாங்கள் ஒப்படைத்த பிள்ளைகள் எங்கே..? இராணுவமே..! அரசே..! கண்ணீரால் நனைந்த ஓமந்தை..

ஆசிரியர் - Editor I
இந்த இடத்தில் உங்களிடம் நாங்கள் ஒப்படைத்த பிள்ளைகள் எங்கே..? இராணுவமே..! அரசே..! கண்ணீரால் நனைந்த ஓமந்தை..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கான சா்தேச தினத்தில் ஓமந்தை பகுதியில் வலிந்து காணாமல்போக செய்யப்பட்டவா்களின் உறவினா்கள் கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனா். 

இன்று காலை வவுனியா பன்றிக்கெய்த குளத்திலிருந்து ஓமந்தை வரையில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஊா்வலமாக நடந்துவந்து ஓமந்தை இராணுவ சோதனை சாவடியில் கவனயீா்ப்பு போராட்டத்தை நடத்தினா். 

2009ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் இராணுவத்தினாிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடா்பான உண்மை நிலை வெளிப்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தி

இந்த கவனயீா்ப்பு போராட்டம் உறவுகளின் கண்ணீருக்கு மத்தியில் நடைபெற்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு