திருமணத்தில் போட்டிருந்த நகைகள் எங்கே..? திருமண வீடியோவுடன் வீடு புகுந்த கொள்ளையா்கள். தடுத்தவா்களுக்கு வாள்வெட்டு..

ஆசிரியர் - Editor I
திருமணத்தில் போட்டிருந்த நகைகள் எங்கே..? திருமண வீடியோவுடன் வீடு புகுந்த கொள்ளையா்கள். தடுத்தவா்களுக்கு வாள்வெட்டு..

யாழ்.நவாலி கொத்துக்கட்டி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையா்கள் வீட்டிலிருந்தவா் களை அடித்து துன்புறுத்தியுள்ளதுடன், புதிதாக திருமணமான பெண்ணிடம் திருமணத்தில் எடுக் கப்பட்ட வீடியோவை காட்டி தாலி கொடி உள்ளிட்ட 60 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. 

திருமண வைபவம் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் 5 பேர் கொண்ட திருட்டுக்கும்பல் வீட்டின் முன்வாயில் வழியாகவும் சமையல் அறையின் மேற்பகுதி வழியாகவும் வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டில் இருந்த பெரிய தந்தை வழிமுறையான ஒருவரைக் கட்டிவைத்துவிட்டு 

நடைபெற்ற திருமண நிகழ்வின்வீடியோ ஒளிப்பதிவை காண்பித்து அதில் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை தருமாறு குறித்த குழு கத்தி முனையில் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியது. திருட்டுக்கும்பலின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாததால் 

வெளிநாட்டில் இருந்து வந்தவர் மீது குறித்த கும்பல் வாளால் டெ்டியதுடன் தாக்குதலையும் நடத்தியது. நிலைமையை உணராத பெண்ணொருவர் சகல நகைகளையும்எடுத்து தருவதாககூறிய நிலையில் குறித்த கும்பல் ஒவ்வொரு இடமாகத் தேடி 

அனைத்து நகைகளையும் பெற்றுக்கொண்டனர். குறித்த கும்பலின் செயற்பாடு தொடர்பில் திருமண வீட்டின் மணமகளால் கைத்தொலைபேசி மூலம் குறுந்தகல் (SMS) மூலம் தெரியப்படுத்தியதன் பயனாக அயல்வீ்டுக்காரர் ஒருவர் 

ஏனையவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனை அறிந்த கொள்ளைக்கும்பல் வெளியில் நின்ற அயல்வீட்டுக்கார நபரை வெட்டிக்காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது. இச்சம்பவத்தில் குறித்த வீட்டில் இருந்தவர்களின் 60 பவுணுக்கு 

மேற்பட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதுடன் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் கடவுச் சீட்டுக்களும் கைப்பைகளும கொள்ளையடிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு 

தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு