60 கமராக்கள், 600 பொலிஸாரை தாண்டி நல்லூர் தேர் திருவிழாவில் 30 பவுண் நகை களவு..!

ஆசிரியர் - Editor I
60 கமராக்கள், 600 பொலிஸாரை தாண்டி நல்லூர் தேர் திருவிழாவில் 30 பவுண் நகை களவு..!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின்போது ஒரு தாலி கொடி மற்றும் 11 சங்கிலிகள் களவாடப்பட்டுள்ளது.

தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலின் பிரகாரம் 30 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேலும் 3 ஆண்களும் தமது சங்கிலி அறுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் தமது நகைகளை பறிகொடுத்துள்ளபோதும்

முறைப்பாடு கொடுக்காமல் சென்றுள்ளனர். நல்லூர் உற்சபத்தில் 60 சீ.சீ.ரி.வி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன்,

600ற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தும் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதுடன், வேறு பல பொருட்களும் திருடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு