மீனவா்களுக்கு எச்சாிக்கை..! நாளை காலை 8 மணி தொடக்கம் நாளை மறுதினம் காலை 8 மணிவரை இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்லாதீா்கள்.

ஆசிரியர் - Editor I
மீனவா்களுக்கு எச்சாிக்கை..! நாளை காலை 8 மணி தொடக்கம் நாளை மறுதினம் காலை 8 மணிவரை இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்லாதீா்கள்.

மன்னாா் தொடக்கம் மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை, மாத்தறை, கொழும்பு, புத்தளம், பொத்து வில் வரையான கடற்பகுதிகளில் நாளை காலை 8 மணி தொடக்கம் 31ம் திகதி காலை 8 மணி வரையில் மீனவா்கள் தொழிலுக்கு செல்லவேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச் சாிக்கை விடுத்திருக்கின்றது. 

நாளை தென்மேற்கு மற்றும் தென் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக் கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டைவரையான கடற்பரப்புகளில் 

அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில்மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக கல்முனை வரையான கடற்பரப்புகளிலும் நீர்கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை 

ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை 

அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக் கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். எனவே கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு