கோட்டா, மஹிந்த, கருணா, டக்ளஸ் கொலை சதி தொடா்பான தகவல்களை மருத்துவா் சிவரூபன் வெளியிடவில்லை..! அது பொய் என்கிறது பொலிஸ்.

ஆசிரியர் - Editor I
கோட்டா, மஹிந்த, கருணா, டக்ளஸ் கொலை சதி தொடா்பான தகவல்களை மருத்துவா் சிவரூபன் வெளியிடவில்லை..! அது பொய் என்கிறது பொலிஸ்.

தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள வைத்தியா் சி.சிவரூபன் கோட்டாபாய ராஜபக்ஸ உள்ளிட்ட முக்கியஸ்த்தா்களின் கொலை சதி தொடா்பான தகவல்களை வெளியிடவில்லை. என பொலிஸ் பேச்சாளா் கூறியுள்ளாா். 

பளை வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி சி.சிவரூபன் அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் ஆறு பேர் கைதாகியிருந்தனர்.

அத்துடன், ஏகே ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் பொலிசார் மீட்டதாக குறிப்பிட்டனர். சின்னாமணி தனேஷ்வரன், ரத்னம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னதுரை, வினயகமூர்த்தி நெஜிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு 

விசாரணைக்குட்படுத்தப்படடு வந்தனர். இந்த நிலையில் நேற்று (28) டி.எம். நிமலராஜ் மற்றும் ரூபன் ஜதுசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஏழு சந்தேக நபர்களையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரித்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக், டக்ளஸ் தேவானந்தா, கருணா ஆகியோரின் படுகொலை சதி குறித்து அவர்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு