யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடைய ரவுடி முல்லைத்தீவில் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடைய ரவுடி முல்லைத்தீவில் கைது..!

யாழ்ப்பாணம் மானிப்பாயில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துட்சன் தொடர்பு பட்டவர் என்ற குற்றச்சாட்டில் மல்லாவியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மானிப்பாயில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் மற்றும் வீடு உடைப்பி சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என்று மல்லாவியை சேர்ந்த இளைஞன் ஒருவரது விபரம் 

மானிப்பாய் பொலிசாரினால் மல்லாவி பொலிசாருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மல்லாவி பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அதே இடத்தை சேர்ந்த மகேந்திரராசா கவிராஜ்(வயது 20) என்ற இளைஞனே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைக்காக மானிப்பாய் பொலிசாரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளார். இளைஞனை பொறுப்பேற்ற மானிப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் 

நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு