தமிழீழ விடுதலை புலிகள் சிறுவா்களை போாில் ஈடுபடுத்தினராம்..! ஆளுநா் ஒழுங்கமைத்த புத்தக கண்காட்சியில். புகுத்தப்பட்ட புத்தகங்கள்.

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் சிறுவா்களை போாில் ஈடுபடுத்தினராம்..! ஆளுநா் ஒழுங்கமைத்த புத்தக கண்காட்சியில். புகுத்தப்பட்ட புத்தகங்கள்.

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவின் ஒழுங்கமைப்பில் நடைபெறும் யாழ்ப்பாணம் புத்தக கண்காட்சியில் தமிழீழ விடுதலை புலிகள் சிறுவா் போராளிகளை படையில் இணைத்தாா்கள் என கூறும் புத்தகங்கள் உள்ளமை தொடா்பில் விமா்சனங்கள் எழுந்துள்ளது. 

சுரேன் ராகவன் ஆளுநராக பொறுப்பேற்றதும் பௌத்த மாநாட்டை வடக்கில் நடத்தினாா் அதனை தொடா்ந்து விடுதலை புலிகள் தொடா்பான அவதுாறை அடுத்த தலைமுறையிடம் விதைக்கும் செயற்பாடாக இதனை செய்கிறாா் என அந்த விமா்சனங்கள் எழுந்துள்ளது. 

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் தமிழீழ விடுதலை புலிகள் சிறுவா்களை போராட்டத்தில் ஈடுபடுத்தினாா்கள் என கூறும் சிங்கள எழுத்தாளா்களின் புத்தகங்கள் தமிழ் மொழியில் விற்பனை செய்யப்படுகின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு