எங்களுக்கு பொலிஸ் பூச்சாண்டி காட்டுவதை டக்ளஸ் நிறுத்தவேண்டும்..! காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவுகள் எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
எங்களுக்கு பொலிஸ் பூச்சாண்டி காட்டுவதை டக்ளஸ் நிறுத்தவேண்டும்..! காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவுகள் எச்சாிக்கை..

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவினா்களது சங்க தலைவிக்கு எதிராக பொலிஸ் தலமையகத்தில் முறைப்பாடு செய்ததன் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை நாடாளுமன்ற உறுப்பினா் டக்ளஸ் தேவானந்தா அச்சுறுத்துகிறாா். 

மேற்கண்டவாறு வடகிழக்கு மாகாண காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவினா்களது சங்க தலை வி கலாரஞ்சினி குற்றஞ்சாட்டியுள்ளாா். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவிய லாளா் சந்திப்பிலேயே அவா் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கின்றாா். 

இதன்போது மேலும் அவா் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்தேவானந்தா அதிகாரத்தில் இருந்தபோது பல இளைஞர்களை கடத்தி படுகொலை செய்தார் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டேருக்கான சங்கத்தலைவி 

அண்மையில் ஊடகவிலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். அது ஊடகங்களில் வெ ளியானதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்தேவானந்தா தாம் குறித்த பெண்மணி மீது கொழும்பு பொலிஸ் தலைமையத்தில் முறைப்பாடு ஒன்றைப்

பதிவு செய்துள்ளதாகவும் அதில் தாம் கடத்தியதற்கான ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்குமாறும் கோரியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்திருந்தார். இவரது செயற்பாடு கடந்த காலங்களில் எவ்வாறு இருந்தது என்று 

அவருக்கு நன்றாகவேதெரியும் அதேபோன்று மக்களும் நன்றாக அறிவார்கள். காணாமல் போன உறவுகளை தோடிவரும் எம்மைப்போன்ற குடும்பத்தினர் மீது அதிகாரங்களைத் திணித்து எமதுபோராட்டங்களை மழுங்கடிக்க முயற்சிக்கின்றார். 

பொலிஸில் முறையிட்டுள்ளேன் என்பதன் ஊடாக டக்ளஸ் தேவானந்தா எமக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் ஓர் தமிழ் இனத்தைச் சேர்ந்தவராக இருந்துகொண்டு எமது கண்ணீரில் வேடிக்கை பார்க்கிறார். ஐக்கியதேசியக் கட்சியைச் சேர்ந்த 

பெண் அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன் தனது கணவரை கொன்றவர் இந்தப் பாராளுமன்றத்திலேயே இருக்கின்றார். அவர் பல கொலைகளுடன் சம்பந்தப்பட்டும் உள்ளார் என பகிரங்கமாக அவருடன் வாதாட்டம் செய்துள்ளார்.

அதற்கு முழுமையாக பதிலளிக்காத பாராளுமன்ற உறுப்பினர் எம்மிடம் ஆதாரங்களை கேட்கின்றார். அவர் பொலிஸார் ஊடாக விடுத்துள்ள சவாலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம் ஏட்டிக்குப் போட்டியாக நாம் கருத்துக்களை 

வெளியிடுவதற்கு அரசியல்வாதிகள் அல்லர் நாம் உறவுகளை தொலைத்த நிலையில் நீண்டகாலமாக தேடிப்போராடி வருகின்றோம் இன்றுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை. இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மூன்று வருடங்களாக 

வீதிகளில் போராடிவருகின்றோம். எமது போராட்டத்திற்கு எங்கள் தமிழ்த் தலைமைகளும் நீதியை இன்றுவரை பெற்றுத்தரவில்லை. நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதும் எமது பிரச்சினைக்கு தீர்வுகிடைக்கவில்லை என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு