மருத்துவா் சிவரூபன் வழங்கிய தகலாம்..! ஆழியவளை பகுதியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
மருத்துவா் சிவரூபன் வழங்கிய தகலாம்..! ஆழியவளை பகுதியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு..

தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றஞ் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மருத்துவா் சி.சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஆழியவளை பகுதியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 

பளை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன்  கைதுசெய்யப்பட்டு, யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஏகே துப்பாக்கிகள், மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலுக்கு அமைய, 

வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் கடற்கரையோரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு