பேஸ்புக் காதலால் உயிரைவிட்ட 18 வயது சிறுவன்..!

ஆசிரியர் - Editor I
பேஸ்புக் காதலால் உயிரைவிட்ட 18 வயது சிறுவன்..!

திருகோணமலையில் பேஸ்புக் காதலினால் 18 வயது சிறுவன் துாக்கில் தொங்கி உயிாிழந்துள்ளான். 

பேஸ்புக் காதலி அனுப்பிய குறுந்தகவல் காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.  இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்த இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த என். டபிள்யூ. அமில நிரோசன் (18 வயது) என கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது பேஸ்புக் மூலமாக நுவரெலியா பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்த நிலையில் யுவதியை பேஸ்புக் மூலமாக தகவல்களை 

பரிமாறிக் கொண்டிருந்த நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த இளைஞன் தான் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் 

சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞனின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் அரச வைத்தியசாலையில் 

வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கன்தளாய் வான் எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு