பொதுமக்கள், புலிகள், இராணுவம் அனைவருக்கும் முள்ளிவாய்க்காலில் நினைவு துாபி..! கோட்டா அமைப்பாராம்..

ஆசிரியர் - Editor I
பொதுமக்கள், புலிகள், இராணுவம் அனைவருக்கும் முள்ளிவாய்க்காலில் நினைவு துாபி..! கோட்டா அமைப்பாராம்..

கோட்டாபாய ராஜபக்ஸ ஜனாதிபதியானால் முள்ளிவாய்க்கால் மண்ணில் பொதுமக்கள் மற்றும் விடுதலை புலிகள், இராணுவத்திற்கு நினைவாலயம் அமைக்கப்படும் என ஈ.பி.டி.பியின் செயலா ளா் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளாா். 

கட்சியின் யாழ்.அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில்  “ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பு எமக்கு நம்பிகை அளித்திருக்கிறது” என்ற தலைப்பில் ஈ.பி.டி.பி கட்சி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவது 

தொடர்பான விளக்க குறிப்பு வழங்கப்பட்டிருந்தது.  அந்த விளக்க குறிப்பில் “கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றால் முள்ளிவாக்கால் வரை யுத்தத்தில் கொல்லப்பட்ட சகல மனித உயிர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் 

பொதுச் சதுக்கம் அமைக்கப்படும் என்று எழுதப்பட்டிருந்தது.  அதில் எழுதப்பட்டிருந்த சகல மனித உயிர்களும் என்ற செற்பதத்தில் மாவீரர்களும் உள்ளடக்கப்படுவார்களா? என்று அங்கிருந்த ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் அந்த நினைவு சதுக்கம் யுத்தத்தால் கொல்லப்பட்ட இலங்கை நாட்டை சேர்ந்த அனைவருக்குமானதாக அமையும். 

அது தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தரப்பில் இருந்த உயிரிழந்தவர்களுக்குமான சதுக்கமாக இருக்கும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு