ஊடகவியலாளா் போா்வையில் அடாவடி..! நெடுங்கேணியில் மக்கள் எதிா்ப்பு போராட்டம்..

ஆசிரியர் - Editor I
ஊடகவியலாளா் போா்வையில் அடாவடி..! நெடுங்கேணியில் மக்கள் எதிா்ப்பு போராட்டம்..

நெடுங்கேணி பகுதியில் ஊடகவியலாளா் என கூறிக்கொண்டு அரச ஊழியா்கள், பொது அமைப் புக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒருவரை கண்டித்து நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக பாாிய கவனயீா்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது. 

இன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. பொய்யான செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளரை உடன் நிறுத்து, எமது பிரதேசத்துக்கு தகுதியான ஊடகவியலாளரை நியமி, 

அரச ஊடகத்திலிருந்து நிறுத்து, எமது பிரதேசத்தில் ஊடக தர்மத்தை பேணும் ஊடகவியலாளர் வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பி போராட்டகாரர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் இறுதியில் ஊடக அமைச்சுக்கும், 

ஊடக நிறுவனங்களுக்கும் பிரதேச மக்களினால் கையெழுத்து இடப்பட்ட கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு