நல்லுாா் வசூலில் மயங்கி கிடக்கும் யாழ்.மாநகரசபை..! கொழும்பு மாநகரசபை உறுப்பினா் மக்கள் பிரச்சினையை பேசுகிறாா்..

ஆசிரியர் - Editor I
நல்லுாா் வசூலில் மயங்கி கிடக்கும் யாழ்.மாநகரசபை..! கொழும்பு மாநகரசபை உறுப்பினா் மக்கள் பிரச்சினையை பேசுகிறாா்..

யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைகள் கடந்த 3 வாரங்களாக முடங்கிய நிலையில், நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

இருதய அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் காத்திருக்கும் நிலைமையில், கடந்த 3 வாரங்களாக சத்திர சிகிச்சைகள் 

எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இருதய அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக பதிவுசெய்யப்பட்ட, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் 

இலட்சக்கணக்கான பணத்தை செலுத்தி சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதில் உள்ள தடங்கல்கள் தொடர்பில் இன்றைய தினம் 

கொழும்பு மாநகரசபை உறுப்பினரும், ஶ்ரீலங்கா தமிழர் ஒன்றியத்தின் செயலாளருமான உமாச்சந்திரா பிரகாஷ் வடமாகாண ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய வட மாகாண ஆளுனர், யாழ். போதனா வைத்தியசாலையில் முடங்கிய இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை 

மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு