தமிழகம்- காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டு வெடிப்பு..! இரு இளைஞா்கள் பலி, தீவிரவாத தாக்குதலா? என சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
தமிழகம்- காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டு வெடிப்பு..! இரு இளைஞா்கள் பலி, தீவிரவாத தாக்குதலா? என சந்தேகம்..

தமிழகம்- காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூா் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் மா்ம பொருள் வெடித்ததில் இரு இளைஞா்கள் உயிாிழந்திருக்கின்றனா். 

மானமதியில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த கங்கையம்மன் கோயிலில் இளைஞர்கள் சிலர் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கோயிலில் பை ஒன்று கிடப்பதை கண்ட இளைஞர்கள் அதை அப்புறப்படுத்த முயற்சித்துள்ளனர். அதன் போது அதிலிருந்த மர்ம பொருள் வெடித்ததில் 

5 இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் 5 பேரில் சூர்யா மற்றும் திலீப் ராகவன் என்ற இளைஞர்கள் 

சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.மர்மப்பொருளுடன் பையை கோயிலில் கொண்டு வந்து வைத்தவர்கள் குறித்தும் உயிர் சேதம் ஏற்படுத்திய மர்மப்பொருள் 

குறித்தும் மானமதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சம்பவ இடத்துக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் கோவில் முழுவதும் 

சோதனை மேற்கொண்டனர். இதுபற்றி மானாமதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் கோபுரத்தில் மர்ம பொருளை வைத்தது யார்?

கோவிலை வெடி வைத்து தகர்க்க சதி திட்டமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு