கட்டுப்பாடற்ற வேகத்தால் உயிரை பறிகொடுத்த முச்சக்கர வண்டி சாரதி..! செட்டிகுளத்தில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகத்தால் உயிரை பறிகொடுத்த முச்சக்கர வண்டி சாரதி..! செட்டிகுளத்தில் சம்பவம்.

செட்டிகுளம் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வீதியைவிட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிாிழந்துள்ளாா். 

குறித்த விபத்து நேற்று இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் என கூறப்பட்டுள்ளது.

சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கு காரணம் என காவல் துறை தெரிவித்துள்ளது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு