இரு விபத்துக்கள், இருவா் உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor I
இரு விபத்துக்கள், இருவா் உயிாிழப்பு..!

கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற இருவேறு விபத்துக்களில் இருவா் உயிாிழந்திருக்கின்றனா். 

சீதுவ பகுதியில் சிற்றூர்தி ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் 33 வயதுடைய ஜா-எல பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உந்துருளியில் பயணித்த மற்றைய நபர் படுகாயமடைந்து சீதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 

றாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சிற்றூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை , கொத்மைலை தவலம்தென்ன பகுதியில் 

உந்துருளி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர், 

20 வயதுடைய கட்டுகொஸ்தொட்ட பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.உந்துருளியின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமையே 

விபத்துக்கு காரணம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு