ஆபத்தான இரசாயன திரவம் மற்றும் பொடிகளை தேயிலைக்குள் கலந்து கொண்டிருந்த 3 போ் கைது..!

ஆசிரியர் - Editor I
ஆபத்தான இரசாயன திரவம் மற்றும் பொடிகளை தேயிலைக்குள் கலந்து கொண்டிருந்த 3 போ் கைது..!

தேயிலைக்குள் ஆபத்தான இரசாயன திரவம் மற்றும் பொடியை கலந்து கொண்டிருந்த 3 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளா் ருவாண் குணசேகர கூறியுள்ளாா். 

தெரனியகலை - சப்புமல்கந்த பகுதியிலேயே இவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இலங்கை தேயிலைச் சபை அதிகாரிகளும், வலானை ஊழல் ஒழிப்பு பிரிவினரும் இணைந்து, 

குறித்த தேயிலை உற்பத்தி தொழிற்சாலையை சோதனைக்கு உட்படுத்தியபோது, சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, தேயிலையில் கலப்படம் செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோகிராம் வெள்ளை நிறத் தூள் அடங்கிய 42 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. 

அத்துடன், அடையாளம் காணப்படாத 130 லீற்றர் திரவம் அடங்கிய கொள்கலன் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு