6 வயது சிறுமி மீது பாலியல் பலாத்கார முயற்சி..! மயங்கிய நிலையில் சிறுமி மீட்பு, தாத்தாவுக்கு தா்ம அடி, காத்தான்குடியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
6 வயது சிறுமி மீது பாலியல் பலாத்கார முயற்சி..! மயங்கிய நிலையில் சிறுமி மீட்பு, தாத்தாவுக்கு தா்ம அடி, காத்தான்குடியில் சம்பவம்..

மட்டக்களப்பு- காத்தான்குடியில் 6 வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரத்திற்கு முயற்சித்த ஒருவவரை பொதுமக்கள் பிடித்து பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளதுடன், மயக்கமடைந்த நிலையில் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனா். 

இன்று காலை கிரான்குளம் கடற்கரைப் பகுதிக்கு குறித்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்ட வேளை, அப்பகுதியிலிருந்த சிலரால் குறித்த சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் 

அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பேரப்பிள்ளை உறவு முறையான குறித்த சிறுமியையே சந்தேகநபர் கடற்கரைக்கு அழைத்துச்சென்று இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த சிறுமி மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டு ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த சந்தேகநபர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனரமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு