மருத்துவா் சிவரூபன் ஊடாக மஹிந்த, கோட்டா, மைத்திாி, டக்ளஸ், கருணா ஆகியோரை கொல்ல புலிகள் திட்டமாம்..! கதை எழுதும் சிங்கள ஊடகம்.

ஆசிரியர் - Editor I
மருத்துவா் சிவரூபன் ஊடாக மஹிந்த, கோட்டா, மைத்திாி, டக்ளஸ், கருணா ஆகியோரை கொல்ல புலிகள் திட்டமாம்..! கதை எழுதும் சிங்கள ஊடகம்.

மஹிந்த, மைத்திாி, கோட்டா உள்ளிட்ட அரசியல் தலைவா்களையும், பொதுமக்களையும் கொல் வதற்கு தமிழீழ விடுதலை புலிகள் திட்டமிட்டதாக மருத்துவா் சிவரூபனிடம் நடத்தப்பட்ட விசா ரணைகள் ஊடாக தொியவந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

தமிழீழ விடுதலைப்புலிகளை மையப்படுத்திய குழுவொன்றே இந்த தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டருந்ததாகவும் பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு சி 4 ரகம் 

கொண்ட 200 கிலோ கிராம் கொண்ட அதி திறன் கொண்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்படவிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது, கிளிநொச்சி பளை வைத்தியசாலையில் பணியாற்றிய நிலையில் கைதான சின்னையா சிவரூபனிடம் 

புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுஅத்துடன் இவர்களின் இலக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ 

மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரை இலக்குவைத்தே தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது,விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் ,

பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை கொலை செய்வதற்கான திட்டங்களும் இதன் போது வௌிவந்துள்ளதாக கைது செய்யப்பட்ட சின்னையா சிவரூபன் பகிரங்கப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,

தமது மருத்துவ தொழிலினை முன்னிறுத்தி சின்னையா சிவரூபன் ஆயுதங்களை சேகரித்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை மறுசீரமைத்துள்ளதாக அந்த சிங்கள ஊடகம் குறிப்பிடுகின்றது,அத்துடன் இலங்கை இராணுவத்தின் 

முக்கிய நபர்கள் வௌிநாடு செல்லும் போது அவர்களை கொலை செய்வதற்கும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு