யாழ்.நாவற்குழியில் கனரக வாகனம் விபத்து..! 15 வயது சிறுமி ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் கனரக வாகனம் விபத்து..! 15 வயது சிறுமி ஆபத்தான நிலையில்..

யாழ்.நாவற்குழி பகுதியில் கனரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுமி ஒருவா் படுகாயமடைந்துள்ளாா். 

மிகை வேகத்தில் பயணித்த பழு தூக்கி வாகனம் கட்டுப்படுத்த முடியாத வேகத்தினால், வீட்டின் மதில் சுவரை இடித்து பாய்ந்தது. 

இதன்போது 15 வயது சிறுமி காயங்களுக்குள்ளாகியுள்ளார். இன்று 2 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னார்ப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு