திருட்டுத்தனமாக திறந்துவைக்கப்பட்டது காணாமல்போனவா்கள் அலுவலகம்..!

ஆசிரியர் - Editor I
திருட்டுத்தனமாக திறந்துவைக்கப்பட்டது காணாமல்போனவா்கள் அலுவலகம்..!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்றை அதிகாலை வேளையில் யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் வேண்டாமென காணாமற்போனரின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். 

அத்தோடு இந்த அலுவலகத்தை யாழில் திறப்பதற்கும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அத்தோடு இந்த அலுவலகம் இன்றைய தினம் 

யாழில்திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் சபாநாயகர் கருஐயசூரிய மற்றும் அமைச்சர் மணோகணேசன் ஆகியோரால் திறந்து வைக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆயினும் இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று அதிகாலை வேளையில் 

அலுவலகத்தை திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு