சூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..! வடமராட்சி கிழக்கில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
சூட்சுமமான முறையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு..! வடமராட்சி கிழக்கில் சம்பவம்.

யாழ்.வடமராட்சி கிழக்கு- ஆழியவளை கடற்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடி பொருட்களை கடற்படையினா் மற்றும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிாிவினா் மீட்டுள்ளனா். 

வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பகுதியில், வடக்கு கடற்படை கட்டளை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 

15 கிலோ எடையுள்ள குறித்த பொதியை கண்டுபிடித்தனர்.அதன் பின்னர் மேலதிக விசாரணைக்காக குறித்த பொதி கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட பொதியில் சி 4 வெடிமருந்து இருந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு