மருத்துவா் சிவரூபனை விடுதலை செய்..! பளையில் மீண்டும் மக்கள் கிளா்ந்தெழுந்து போராட்டம்..

ஆசிரியர் - Editor I
மருத்துவா் சிவரூபனை விடுதலை செய்..! பளையில் மீண்டும் மக்கள் கிளா்ந்தெழுந்து போராட்டம்..

பளை வைத்தியசாலையின் பொறுப்பதிகாாி வைத்தியா் சி.சிவரூபன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோாியும் இன்று பளை பிரதேச மக்களால் கவனயீா்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. 

இன்று காலை பத்துமணியளவில் பளைப் பிரதேச வைத்திய சாலைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபவனியாக விடுதலை செய் வைத்தியரை விடுதலை செய், நிறுத்து நிறுத்து சட்டத்தின் முன் நிறுத்து,

நீக்கு நீக்கு பயங்கரவாத சட்டத்தி நீக்கு என்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பளைப் பிரதேச செயலகம் வரை வருகைதந்து    ஜனாதிபதிக்கான கோரிக்கை மகஜர் பிரதேச செயலக அதிகாரியிம் கையளிக்கப்பட்டது.  

அத்துடன் வைத்தியரை சட்டத்தின் முன் நிறுத்தாத பட்டசத்தில் பாரியளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் போராட்டகாரர்கள் தெரிவித்தனர் இப் போராட்டத்தில் பளை மக்கள் அரசியல் வாதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு