கட்டாக்காலி நாய்களால் நிறையும் முல்லைத்தீவு நகரம்..! நடவடிக்கை எடுப்பது யாா்..?

ஆசிரியர் - Editor I
கட்டாக்காலி நாய்களால் நிறையும் முல்லைத்தீவு நகரம்..! நடவடிக்கை எடுப்பது யாா்..?

முல்லைத்தீவு நகரத்தில் கட்டாக்காலி நாய்கள அதிகரித்துக்காணப்படுவதனால் நாய்க்கடிக்கு இலக்காவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்காணப்படுவதுடன், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன.

முல்லைத்தீவு நகரம், முல்லைத்தீவு பேருந்து நிலையம் மற்றும் நகரத்தின் பல்வேறு பகதிகளில் கட்டக்;காலி நாய்களின் தொல்லை அதிகளவில் காணப்படுகின்றன.

குறிப்பாக, இநதப்பிரதேசத்தில்  25 -35 இற்கும்மேற்பட்ட நாய்கள் கூட்டம்கூட்டமாக வீதிகளில் நடமாடுவதனால் போக்குவரத்தில் ஈடுபடுவோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் அதேநேரம்இந்த கட்டாக்காலி நாய்களால்அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன.

இதேவேளை நகரப்பகுதியில் அதிகரித்துக்காணப்படும் நாய்களினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதுடன், பெருமளவானோர் நாய்கடிக்கு இலக்;காகியும் வருகின்றனர்.

முல்லைத்தீவு நகரத்தில் உள்ள படைமுகாம்கள் பொலிஸ் நிலையம், போன்ற பகுதிகளில் இந்த கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் அதிகரித்துக்காணப்படுவதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு