திருமண வீட்டில் மொய் பணத்தை திருடியவருக்கு நடந்த கதி..! கிளிநொச்சியில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
திருமண வீட்டில் மொய் பணத்தை திருடியவருக்கு நடந்த கதி..! கிளிநொச்சியில் சம்பவம்.

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள நன்பர்கள் விருந்தகத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒருதொகைப் பணத்தினை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை மேலும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள நன்பரகள் விருந்தினர் விடுதியில் கடந்த யூன் மாதம் 05ம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெருந்தொகை நிதி கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் கடந்த யூன் மாதம் 09ம் திகதி  கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சிப்பொலிசார் விடுதியில் பொருத்தப்பட்ட சீ.சீ.ரீவி கமரா பதிவுகளை யூன் மாதம் 28ம்திகதி  பார்வையிட்டு அதனை  அடிப்படையாக வைத்து சந்தேக நபர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மேற்படி சந்தேக நபரை 

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, குறித்த சந்தேக நபர் தொடர்ந்தும்  நேற்று(21-08-2019) வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். மேற்படி சந்தேக நபரை நேற்று (21-08-2019)கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றில் நீதி மன்ற நீதிவான் ரீ. சரவனராஜா அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தியதுடன் 

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிசார் சந்தேக நபரின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி மேலும் இரண்டு பேரைக்கைது செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவிதததையடுத்து மேற்படி சந்தேக நபரை  எதிர் வரும் 04ம் திகதி வரையும் மேலும் 14 நாட்கள் 

விளக்க மறியலில் வைக்குமாறு கட்டளையிட்டுள்ளது. முறைப்பாட்டாளர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பலரைக்கைது செய்யவேண்டியுள்ளதாக பொலிசார் தெரிவித்தாலும் சந்தேக நபருக்கு சார்பாகவே செயற்;படுவதாகவும் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

என்றும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி மன்றில் ஆஜராகவில்லை எனவும்  கடந்த தவனையில் தெரிவிக்கப்பட்டபோது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்;பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு