13 உணவு கையாளும் நிலையங்களுக்கு சா்வதேச தர சான்றிதழ்..! வடமாகாணம் சாதனை..

ஆசிரியர் - Editor I
13 உணவு கையாளும் நிலையங்களுக்கு சா்வதேச தர சான்றிதழ்..! வடமாகாணம் சாதனை..

வடமாகாணத்தில் உள்ள 13 உணவு உற்பத்தி மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களுக்கு சா்வதேச தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.வா்த்தக தொழிற்துறை மன்றம் கூறியுள்ளது.

இது தொடர்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது, இலங்கை அர­சும் ஜேர்­மன் அர­சும் உணவு உற்­ பத்தி, பதப்­ப­டுத்­தல், மென்­பான உற்­பத்தி போன்ற உணவு கையா­ளும் நிலை­யங்­க­ளுக்­கான பன்­ னாட்டு தர (ஜி.எம்.பி) சான்­றி­தழ் வழங்­கும் திட்­டத்­துக்கு ஒப்­பந்­தம் செய்துகொண்­டன.

இது 2016 ஆம் ஆண்டு தொடக்­கம் 2021ஆம் ஆண்டு வரை பல கட்­டங்­க­ளாக நடை­முறைப்படுத்­ தப்­பட்­டு­வ­ரு­கி­றது. பன்­னாட்டு உணவு உற்­பத்­தி­யில் பயன்­ப­டும் தொழில்நுட்­பம்,தரம், உணவு விஞ்­ஞா­னம்,சுகா­தா­ரம் உட்பட பல்­வேறு விட­யங்­கள் அவ­தா­னிக்­கப்­பட்டு, 

பயிற்­சி­கள் வழங்­கப்­பட்டு இந்தச் சான்­றி­தழ் வழங்­கப்­பட்­டு­வ­ரு­கி­றது. இதற்கு அமை­வாக வடக்கு மாகா­ணத்­தில் யாழ்ப்­பா­ணம் வர்த்­தக தொழில் துறை மன்­றம்,பி.ரி.டி ஜேர்­மன் நிறு­வ­ னம்,மாகாண சுகா­தாரத் திணைக்­க­ளம் 

ஆகி­யன இணைந்து இந்த வேலைத்திட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ ருந்­தன. வடக்கு மாகா­ணத்­தில் யாழ்ப்­பா­ணம்,கிளி­நொச்சி,வவு­னியா ஆகிய மாவட்­டங்­க­ளில் உள்ள 370 நிறு­வ­னங்­கள் முதற் கட்டப் பயிற்­சிக்கு உள்­வாங்­கப்­பட்­டன.

பயிற்­சி­யின் பின்­னர் 22 நிறு­வ­னங்­கள் பன்­னாட்டு தரச் சான்­றி­த­ழுக்கு விண்­ணப்­பித்­தி­ருந்­த­ன. அவற்­றில் 13 உணவு கையா­ளும் நிலை­யங் களுக்கு பன்­னாட்டு தர உணவு நியம சான்­றி­தழ் தற்­ போது வழங்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பாண மாவட்­டத்தில் 8,கிளி­நொச்சி 1,வவு­னியா 4 உட்­பட 13 நிறு­வ­னங்­க­ளுக்கு இந்தச் சான்­றி­தழ் வழங்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் எ1 ராஜா கிறீம் கவுஸ், அம்­பாள் வெதுப்­ப­கம், எவர் ரீ புரூட்ஸ் பிறை­வேட் லிமி­ட்டெட்,

ஜசுபி, லிங்­கன் கூல் பார், சுபாஷ் வெதுப்­ப­கம்,ரைற்­ரா­ணிக் ரெஸ்­டோ­ரண்ட், விண்­மீன் ரென்ஸ்­ ரோ­டன்ட் வெதுப்­ப­கம் ஆகி­ய­ன­வும், கிளி­நொச்சி மாவட்­டத்­தில் பாரதி ஸ்டார் ஹோட்­ட­லும், வவு­ னியா மாவட்­டத்­தில் ஹோட்­டல் நெலி ஸ்டார் பிரை­வேட் லிமி­ட்டெட், 

றோயல் கார்­டன் கெஸ்ட் கவுஸ், வன்னி இன், யாழ்.ஐஸ் கிறீம் பிரை­வேட் லிமிட்டெட் என்­ப­ன­வும் பன்­னாட்டு தர உணவு நியமச் சான்­றி­த­ழைப் பெற்­றுள்­ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு