கட்டுநாயக்கவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த வாகனம் விபத்து..! குழந்தைகள் உட்பட 7 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
கட்டுநாயக்கவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த வாகனம் விபத்து..! குழந்தைகள் உட்பட 7 போ் படுகாயம்..

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் பாரவூா்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 போ் படுகாயமடைந்துள்ளனா். 

இன்று காலை புத்தளம், அநுராதபுரம் வீதியின் அளுத்கம பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவை சேர்ந்தவர்கள், 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உறவினர்களை வழியனுப்பி விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்தில் சிக்கினர்.

அவர்கள் பயணம் செய்த ஹைஏஸ் வாகனம், முன்னால் சென்று கொண்டிருந்த லொறியுடன் மோதி விபத்திற்குள்ளானது.

சாலியவெவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு