வட்டக்கச்சியில் பதற்றம்..! நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரனின் வீட்டை இலக்குவைத்து பெருமளவு படையினா் குவிப்பு..

ஆசிரியர் - Editor I
வட்டக்கச்சியில் பதற்றம்..! நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரனின் வீட்டை இலக்குவைத்து பெருமளவு படையினா் குவிப்பு..

நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரனின் வீட்டை இலக்குவைத்து கிளிநொச்சி- வட்டக்கச்சி பகுதியில் படையினா், பொலிஸாா் மற்றும் அதிரடிப்படையினா் குவிக்கப்பட்டிருக்கின்றனா். 

குறித்த பகுதியில் தேடுதல் ஒன்றுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாகவே 

இவ்வாறு பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் 

தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குறித்த பகுதியில் நோயாளர் காவு வண்டியும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும். 

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் எமது செய்தியாளர் இணைந்திருப்பார். தொடர்ந்தும் எமது செய்திகளுடன் இணைந்திருங்கள்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு