நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த ரவுடி கும்பல் அட்டகாசம்..! வீட்டிலிருந்தவா் மீது சரமாாி வாள்வெட்டு, வீட்டுக்கு தீ வைப்பு..

ஆசிரியர் - Editor I
நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த ரவுடி கும்பல் அட்டகாசம்..! வீட்டிலிருந்தவா் மீது சரமாாி வாள்வெட்டு, வீட்டுக்கு தீ வைப்பு..

யாழ்.நவாலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த ரவுடிகள் வீட்டிலிருந்த இளைஞன் ஒருவனை வெட்டியுள்ளதுடன், வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியுள்ளதுடன், வீட்டுக்கு தீயிட்டு கொழுத்தியுள்ளனா். 

மானிப்பாய் நவாலி வடக்கில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் கையில் படுகாயமடைந்த சத்தியசீலன் சயந்தன் (வயது 20) என்ற இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

மோட்டார் சைக்கிள் ஒன்றில் முகத்தை துணியால் மூடியவாறு மூன்று பேர் வாள்களுடன் வந்தனர். அவர்கள் வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, சவுண்ட் சாதனங்கள் மற்றும் கண்ணாடி அலுமாரி என்பவற்றைக் 

கைக் கோடாரியால் கொத்திச் சேதப்படுத்திவிட்டு அவற்றை பெற்றோல் ஊற்றித் தீவைத்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு