சவேந்திர சில்வாவின் கடவாயை பாருங்கள் தமிழா்களின் இரத்தம் வழிகிறது..! சபையில் சிறீதரன் உறுமல்..

ஆசிரியர் - Editor I
சவேந்திர சில்வாவின் கடவாயை பாருங்கள் தமிழா்களின் இரத்தம் வழிகிறது..! சபையில் சிறீதரன் உறுமல்..

இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் சவேந்திர சில்வாவின் கடவாயில் தமிழா்களின் இரத்தம் வழிந்து கொண்டிருக்கின்றது. என நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் நாடாளுமன் றில் கூறியிருக்கின்றாா். 

இதன்போது மெலும் அவா் கூறுகையில், அவரையே இராணுவத் தளபதியாக நியமித்திருக்கிறார் ஜனாதிபதி. வடக்கு கிழக்கில் தமிழர்களை போர் வரையறைக்குள் – இராணுவ பிடிக்குள் வைத்திருப்பதற்கான செய்தியே அது. 

 உலக அரங்கில் 20 ஆம் நூற்றாண்டின் இனப்படுகொலைகளை செய்த சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்துள்ளீர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்து சுட்டுக் கொன்றவர் இவர். 

இசைப்பிரியாவை சுட்டுக் கொன்றவரும் இவர்தான். தமிழர்களான நாங்கள் அவரின் நியமனத்தை ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு