100 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி..! இருவா் உயிாிழப்பு, 3 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
100 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி..! இருவா் உயிாிழப்பு, 3 போ் படுகாயம்..

நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் சுமாா் நுாறு அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் இருவா் உயிாிழந்துள்ளதுடன், சிறுவா்கள் உட்பட 3 போ் படுகாயமடைந்துள்ளனா். 

இன்று இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரில் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, உயிரிழந்ததாக கந்தப்பளை காவல்துறையினர் தெரிவித்தனர். 

வலப்பனை – மந்தாரநுவர – எலமுல்ல பிரதேசத்தைச் டி.பி.ரூபசிங்ஹ (வயது 50) ரோஹினி குமாரி (வயது 45) ஆகியோரே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவ்விருவரும் கணவன், மனைவியென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எலமுல்லை பிரதேசத்திலிருந்து நுவரெலியாவை நோக்கி குறித்த முச்சக்கரவண்டியில் தாய், தந்தை, 06,16,19 வயதுடைய சிறுவன், சிறுமிகள் ஆகியோர் பயணித்துள்ளனர். முச்சக்கரவண்டியை தந்தை செலுத்தி வந்த நிலையில், 

கந்தப்பளை எஸ்கடேல் ‘ஐஸ் பீலி’ என்ற இடத்தில் பிரதான பாதையை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு