போா்க் குற்றச்சாட்டுக்குள்ளான சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்படலாம்..!

ஆசிரியர் - Editor I
போா்க் குற்றச்சாட்டுக்குள்ளான சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்படலாம்..!

போா்க் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவு இராணுவ தளபதியாக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. 

இலங்கையின் தற்போதைய இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே 

புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்கவிற்கு பதவி நீடிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளபோதிலும் 

அதற்கான சாத்தியம் இல்லை என பாதுகாப்பு மற்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை சவேந்திர டி சில்வா மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் கடும் எதிர்ப்பை வெளியிடும் நிலை காணப்படுகின்றது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனசவேந்திர டி சில்வா இலங்கையின் இராணுவதளபதியாக நியமித்தால் ஐக்கியநாடுகள் 

அமைதிப்படையுடனான இலங்கையின் தொடர்புகள் முற்றாக தடைபடலாம்.யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான அரசாங்க படையினருடன் 

ஐக்கிய நாடுகள் தொடர்புகளை பேணுவது தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த நிலை உருவாகலாம்.

இதேபோன்று இலங்கையுடனான அமெரிக்காவி;ன் பாதுகாப்பு ஒத்துழைப்புகளும் பாதிக்கப்படலாம்சவேந்திரசவேந்திர டி சில்வாவிற்கு 

கடந்த காலங்களில் மைத்திரிபால சிறிசேன பதவி உயர்வு வழங்கியவேளை சர்வதேச அளவில் இதற்கு கடும் எதிர்ப்பு உருவானது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு