கடலை நிரவி விமான ஒடுதளத்தை அமையுங்கள்..! மாவை சேனாதிராஜா அறிவுரை..

ஆசிரியர் - Editor I
கடலை நிரவி விமான ஒடுதளத்தை அமையுங்கள்..! மாவை சேனாதிராஜா அறிவுரை..

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பின்போது மக்களுக்கு சொந்தமான காணி களை சுவீகாிக்காமல் கடலை நிரவி ஓடுபாதையை விாிவாக்குங்கள் என நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா கோாிக்கை விடுத்துள்ளாா். 

யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் அபி­வி­ருத்தி தொடர்­பான கூட்­டம் தலைமை அமைச்­சர் ரணில்விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லக மாநாட்டு மண்­ட­பத்­தில் நேற்று நடை­ பெற்­றது. அதில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இத­னைத் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: பலாலி வானூர்தி நிலைய அபி­வி­ருத்தி நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. வானூர்தி நிலை­யத்­துக்­கான ஓடு­த­ளம் விரி­வாக்­கப்­ப­டு­மா­யின், மக்­க­ளின் காணி­கள் சில­ வற்­றைச் சுவீ­க­ரிக்­க­வேண்­டி­வ­ரும். 

அது பற்றி ஆலோ­சிக்­கப்­ப­டு­கின்­றது என்று அறி­கின்­றேன். காணி சுவீ­க­ரிப்பை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஓடு­த­ளத்தை விரி­வாக்க வேண்­டு­மா­யின் வானூர்தி நிலை­யத்­தின் வடக்­குப் பக்­க­மா­க­வுள்ள கடற் பகு­தியை நிரவி அத­னூ­டாக ஓடு­த­ளத்தை அமைக்க முடி­யும். என்­றார்.

இதன் போது கருத்து தெரி­வித்த பாது­காப்பு தரப்­பி­னர், வானூர்தி நிலைய அபி­வி­ருத்­தி­யின்­போது காணி­கள் சுவீ­க­ரிப்­பது தொடர்­பில் இப்­போது எந்த முயற்­சி­யும் நடை­பெ­ற­வில்லை. நீங்­கள் சொல்­வ­து­போல கடலை நிரவி ஓடு­த­ளம் அமைப்­பது 

தொடர்­பாக நாமும் சிவில் வானூர்­திப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யி­னர் போன்ற பல தரப்­புக்­க­ளு­ட­ னும் பேசி முடி­வுக்கு வர­மு­டி­யும் – என்­ற­னர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு