கலாசார மத்திய நிலைய நிா்மாண பணிகளை பாா்வையிட்டாா் ரணில்..!

ஆசிரியர் - Editor I
கலாசார மத்திய நிலைய நிா்மாண பணிகளை பாா்வையிட்டாா் ரணில்..!

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற யாழ்.கலாச்சார மத்திய நிலைய நிா்மாண பணிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்று பார்வையிட்டுள்ளார்.

வடக்கிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்.வந்துள்ள பிரதமர் பல இடங்களிற்கும் சென்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன் தொடராக அவரது விஷயத்தின் மூன்றாம் நாளான இன்று காலை யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் 

மத்திய நிலையத்திற்கு சென்றுள்ளார். இதன் போது புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு அவை தொடர்பில் ஆராய்ந்துள்ளார். மேலும்  புனரமைக்க தொடர்பாக 

இந்திய தூதுவராலய அதிகாரிகள் மற்றும் புனரமைக்க பணிகளை மேற்கொள்கின்ற தரப்புக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலாசார மத்திய நிலையத்தை  பிரதமருடன் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் 

யாழிலுள்ள இந்திய துணைத்தூதுவராலய தூதுவர் கே.பாலச்சந்திரன் உட்பட பலரும் சென்று பார்வையிட்டிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு