கழுத்தில் சீலை சிக்கியதில் 8 வயது சிறுவன் மரணம்..! அப்படி ஒரு மரணம் குறித்து அடிக்கடி கேட்பானாம். உறவினா்கள் கூறும் கதை.

ஆசிரியர் - Editor I
கழுத்தில் சீலை சிக்கியதில் 8 வயது சிறுவன் மரணம்..! அப்படி ஒரு மரணம் குறித்து அடிக்கடி கேட்பானாம். உறவினா்கள் கூறும் கதை.

செட்டிகுளம் பகுதியில் சல்வாா் தாவணி கழுத்தில் சிக்கிய நிலையில் 8 வயது சிறுவன் உயிாிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, செடடிகுளம், முகத்தான்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில் 

யன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த தாவணி இறுகியதில் 8 வயது சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

சல்வார் இறுகியதும் 5 வயது சகோதரன் கூச்சலிட்டு தனது மற்றைய சகோதரன் மற்றும் உறவினர்களின் உதவியுடன் சிறுவனை மீட்ட போதும் அது பயனளிக்கவில்லை. 

சிறுவன் குறித்த இடத்திலேயே மரணமடைந்தார். குறித்த சிறுவனின் சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் சசிதரன் கிருசான் (வயது 8) என்ற சிறுவனே மரணமடைந்தவராவார். குறித்த சிறுவனின் தந்தையார் கொலைச் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் 2015 ஆம் ஆண்டு 

முதல் மரணதண்டனை கைதியாக கண்டி போகம்பர சிறைச்சாலையில் உள்ள நிலையில் சிறுவன் தனது தந்தையாரை இவ்வாறு தான் கொலை செய்வார்களா 

என கழுத்தில் இறுக்கி பல தடவை வினவியதுடன், தந்தையார் தொடர்பில் மன அழுத்திற்கு உள்ளாகியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

 இச்சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு