நல்லுாா் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் நடமாடிய 3 முஸ்லிம் இளைஞா்கள் கைது..! தீவிர விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸாா் தகவல்..

ஆசிரியர் - Editor I
நல்லுாா் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் நடமாடிய 3 முஸ்லிம் இளைஞா்கள் கைது..! தீவிர விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸாா் தகவல்..

நல்லுாா் கந்தசுவாமி ஆலய மஹோட்சபம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் ஆலய சூழலில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 3 முஸ்லிம் இளைஞா்கள் சந்தேகத்தின் பெயாில் கைது செய்யப்பட்டுள்ளனா். 

குறித்த மூன்று முஸ்லிம் இளைஞர்களும் நேற்று இரவு 10 மணி அளவில் ஆலய வளாகத்துக்குள் நடமாடியதனால்  சந்தேகத்தின் பேரில் குறித்த மூன்று முஸ்லிம் இளைஞர்களையும் கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும் கைதுசெய்யப்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்களும் கிளிநொச்சி மற்றும் முழங்காவில்  பகுதிகளை சேர்ந்தவர்கள்  எனவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 

யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு