கோத்தாவின் பெயரை கூறி யாழ்.தாவடியில் ரவுடிகள் அட்டகாசம்..! தட்டிக்கேட்ட பொதுமக்கள் மீது தாக்குதல்.

ஆசிரியர் - Editor I
கோத்தாவின் பெயரை கூறி யாழ்.தாவடியில் ரவுடிகள் அட்டகாசம்..! தட்டிக்கேட்ட பொதுமக்கள் மீது தாக்குதல்.

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபாய ராஜபக்ஸ அறிவிக்கபட்டதை தொடா்ந்து தாவடி சந்தி பகுதியில் வெடி கொழுத்தியவா்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்து கொண்டதாகவும், அதனை தட்டிகேட்டவா்களுடன் சண்டித்தனம் செய்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனா். 

சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ண­யின் ஜனாதிபதி வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக்ச அறி­ விக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து நாடு முழு­வ­தும் பல்­வேறு இடங்­க­ளில் வெடி­கள் கொழுத்­தப்­பட்­டன. யாழ்ப்­பா­ணத்­தின் பல்­வேறு சந்­தி­க­ளி­லும் இவ்­வாறு வெடி­கள் கொழுத்­தப்­பட்­டன.

தாவ­டிப் பகு­தி­யி­லுள்ள வர்த்­த­கர் ஒரு­வ­ரின் ஏற்­பாட்­டில், தாவ­டிச் சந்­திப் பகு­தி­யி­லும் வெடி­கள் கொழுத்­தப்­பட்­டன. வீதி­யின் நடுவே வெடி­கள் கொழுத்­தப்­பட்­ட­மை­யால் போக்­கு­வ­ரத்­துக்கு இடை­யூறு ஏற்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் பொது­மக்­கள் வெடி கொழுத்­தி­ய­வர்­க­ளி­டம் 

கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர். அது வாய்த்­தர்க்­க­மாக மாறி­யுள்­ளது. பின்­னர் கைக­லப்பு வரை­யில் சென்­றுள்­ளது. கைக­லப்பு முடிந்த பின்­னர் சுன்­னா­கம் பொலி­ஸா­ரின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டது. ஆனால், தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கிய 

பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னர், பொலிஸ் நிலை­யம் வரை­யில் அலை­யத் தயா­ரில்லை என்று அந்­தப் பகு­தி­யி­லி­ருந்து வில­கிச் சென்­றுள்­ள­னர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு