ஆட்சிக்கு வரும் முன்னபே கோட்டாபாய, பஷில் பெயா்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி கொள்ளை..! இவன் யாா்..?

ஆசிரியர் - Editor I
ஆட்சிக்கு வரும் முன்னபே கோட்டாபாய, பஷில் பெயா்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி கொள்ளை..! இவன் யாா்..?

பஷில் ராஜபக்ஸ மற்றும் கோட்டாபாய ராஜபக்ஸ ஆகியோாின் பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் கள்ளன் ஒருவன் யாழ்.குடாநாட்டுக்குள் நுழைந்துள்ளதாகவும், அவா் தொடா்பில் விழி ப்பாக இருக்குமாறும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

பசில் ராஜபக்சவின் வட மாகாணத்திற்கான இணைப்பாளர் என கூறி அபித்த என்ற பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நபரே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது. யாழ். நகர பகுதியில் பாலர் பாடசாலை நடத்தி வரும் 

இவர் வடக்கை மையப்படுத்தி பல வியாபாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் கூட்டங்களுக்கு மக்களை அழைக்கும் போது பொருட்கள் தருவதாக கூறி அழைப்பு விடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இவரால் கோத்தபாயவிற்கு ஆதரவாக பிரசுரிக்கப்பட்ட முதல் பதாதையில் மிரட்டும் தொனியில் வாசகம் எழுதப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு மக்கள் கோத்தபாயவிற்கு வாக்களித்தால் தான் அபிவிருத்தி என்பது போல் அர்த்தம் புலப்படுவதாகவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.அதேவேளை தமிழ் பேச தெரியாத ஒருவர் பசிலின் வட மாகாணத்திற்கான உண்மையான இணைப்பாளரா? 

இவர் அவர்கள் அணியை சேர்ந்தவரா என்ற குழப்பம் மக்களிடையே எழுந்துள்ளதாகவும் யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு