பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..!

ஆசிரியர் - Editor I
பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..!

வாழைசேனை- ஓட்டமாவடி பகுதியில் பாழடைந்த வீடொன்றிலிருந்து பெண்னொருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 

மனநலம் பாதிக்கப்பட்ட நேற்று சனிக்கிழமை இரவு காணாமல் போயிருந்த நிலையில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் செம்மண்ணோடை, கொண்டயன்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

என்று வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 

அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் சகோதரனின் மகன் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு