வவுனியா மாணவன் உட்பட இருவா் கடலில் மூழ்கி உயிாிழப்பு..! குச்சவெளி கடலில் துயர சம்பவம்.

ஆசிரியர் - Editor I
வவுனியா மாணவன் உட்பட இருவா் கடலில் மூழ்கி உயிாிழப்பு..! குச்சவெளி கடலில் துயர சம்பவம்.

திருகோணமலை- குச்சவெளி கடலில் மூழ்கி பாடசாலை மாணவன் உட்பட இருவா் உயிாிழந்திருக்கின்றனா். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றிருக்கின்றது. 

வவுனியா- கூமாங்குளம் பகுதியில் இருந்து சிலர் வாகனம் ஒன்றில் குச்சவெளிப் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். குச்சவெளி கடலில் பெண்கள், ஆண்கள் என சுற்றுலா சென்றவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது, 

மாணவன் உள்பட இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அங்கு நின்றவர்கள் இருவரையும் மீட்க முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை. இருவரும் சடலங்களாகவே மீட்கப்பட்டனர். 

சம்பவத்தில் வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த த.ஐங்கரன் (வயது – 20) மற்றும் வவுனியா விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த மாணவனான உ.கிசாளன் (வயது 16) ஆகிய இருவருமே உயிரிழந்தனர். 

இருவரது சடலங்களும் நிலாவெளி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை நிலாவெளிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு