பிரபாகரனின் பாதை தவறாக இருக்கலாம், அவாிடம் இலக்கும், ஒழுக்கமும் இருந்தது..! மஹிந்த ராஜபக்ச கூறுகிறாா்.

ஆசிரியர் - Admin
பிரபாகரனின் பாதை தவறாக இருக்கலாம், அவாிடம் இலக்கும், ஒழுக்கமும் இருந்தது..! மஹிந்த ராஜபக்ச கூறுகிறாா்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரனின் பாதை தவறாக இருந்தாலும் அவாிடம் ஒரு இலக்கும், ஒழுக்கமும் இருந்தது. என எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளாா். 

கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல்-21 தாக்குதலுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக 

பரவலாகப் பேசப்பட்டமை குறித்து கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரபாகரனின் மார்க்கம் தவறானாலும் அவர் ஒரு நோக்கத்தைக் கொண்டு போரிட்டார். அவரிடம் இலக்கும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் இருந்தது.

ஆனால் தற்போது இடம்பெற்ற தாக்குதல்கள் அவ்வாறானது இல்லை. அவர்கள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவார்கள். அவர்களுக்கு நோக்கம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு