பெண்களை பாலியல் அடிமைகளாக்கி பணம் சம்பாதித்த கும்பல்..! கூண்டோடு அள்ளிய பொலிஸாா்..

ஆசிரியர் - Admin
பெண்களை பாலியல் அடிமைகளாக்கி பணம் சம்பாதித்த கும்பல்..! கூண்டோடு அள்ளிய பொலிஸாா்..

கனடா- ஒன்றாாியோ மாகாணத்தில் மிக நீண்டகாலமாக பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி பணம் சம்பாதித்த 15 போ் கொண்ட கும்பல் ஒன்றினை பொலிஸாா் கைது செய் திருக்கின்றனா். 

இந்த சம்பவத்தில் எத்தனை பெண்கள் இவ்வாறு பாதிப்புகளுக்கு உள்ளானார்கள் என்ற உறுதியான விபரங்கள் இன்னமும் கிடைக்கவில்லையெனவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். 

இதுதவிர குறித்த குழு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கைதுசெய்யப்பட்டவர்கள் மீது சுமார் 200 குற்றச்சாட்டுகள் 

பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது ஒரு மில்லியன் டொலர்களுக்கும் மேலான பெறுமதி உடைய 12.5 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப் பொருள் உள்ளிட்ட மேலும் பல போதைப் பொருட்கள் மற்றும் மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

அது மட்டுமின்றி தாக்குதல் தரம் வாய்ந்த துப்பாக்கிகள் மூன்று உள்ளிட்ட 11 துப்பாக்கிகள், மேலும் சில கைத்துப்பாக்கிகள் போன்றவையும் இந்த சிறப்பு நடவடிக்கையின்போது மீட்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக இந்தக் குழுவில் இருந்தோர் ஒன்ராறியோவின் பல பகுதிகளிலும் பாரிய உயர்ரக உந்துருளிகளை வைத்திருக்கும் முக்கிய புள்ளிகள் என்றும் கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு