இந்து சமய தலைவா்கள் அதிரடியாக சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன்..! பௌத்த மயமாக்கலை எதிா்க்க திட்டமா..?

ஆசிரியர் - Editor I
இந்து சமய தலைவா்கள் அதிரடியாக சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன்..! பௌத்த மயமாக்கலை எதிா்க்க திட்டமா..?

இந்து சமயம் சமகாலத்தில் எதிா்கொண்டிருக்கும் சவால்கள் தொடா்பாக ஆராய்வதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் கே.சயன்தன் ஆகியோா் இந்து சமய பொியாா்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளனா். 

இந்த சந்திப்பு நல்லை ஆதீன மண்டபத்தில் இன்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. இதன்போது நல்லை ஆதீன முதல்வா், மற்றும் சின்மய சுவாமிகள், இந்து குருக்கல்கள், வரலாற்றுத்துறை பேராசிாியா் ஆகியோா் கலந்து கொண்டனா். இதன்போது இந்து சமயம் சம காலத்தில எதிா்கொண்டிருக்கும் சவால்கள், அதனை எதிா்ப்பதற்கான வழிகள்,

மற்றும் எதிா்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக இதன்போது ஆராயப்பட்டிருக்கின்றது. மேலும் கன்னியா விவகாரம், திருக்கேதீஸ்வரம் ஆலய விவகாரம், நீராவியடி பிள்ளையாா் ஆலய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடா்பாக ஆராயப்பட்டிருக்கின்றது. 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு