படிப்பது தேவராம்.. இடிப்பது சிவன் கோவிலா..? பொலிஸாருக்கு நன்றி கூறிய கடும் தமிழ்தேசியவாதிகள்..

ஆசிரியர் - Editor I
படிப்பது தேவராம்.. இடிப்பது சிவன் கோவிலா..? பொலிஸாருக்கு நன்றி கூறிய கடும் தமிழ்தேசியவாதிகள்..

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோட்டசப காலத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கும் பொலிஸாா் சிறந்த பாதுகாப்பை வழங்குவதாக கூறியுள்ள கடும் தமிழ்தேசியம் பேசும் கட்சி ஒன்றின் உறுப்பினா் பொலிஸாருக்கு நன்றிகளை கூறியுள்ளாா். 

நல்லுாா் ஆலய சுற்றாடலில் பாதுகாப்பு அதிகாிக்கப்பட்டுள்ளதுடன், ஆலயத்திற்கு செல்லும் பக்தா்கள் பொலிஸாாின் உடல் சோதனைக்கு உட்படுத்தப்படுவது தொடா்பாக கடுமையான விமா்சனங்கள் எழுந்திருக்கின்றது. குறிப்பாக பொதுமக்கள் கடும் விசனம் தொிவிக்கின்றனா். 

இந்நிலையில் யாழ்.மாநகரசபை அமா்வு இன்று இடம்பெற்றபோது ஆழுங்கட்சி உறுப்பினா்கள் மூவா் பொலிஸாாின் உடல் சோதனை நடவடிக்கை பொதுமக்களுக்கு அசௌகாியமானது எனவும் அதற்கு மாற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும், 

பொலிஸாருக்கு அதிக நிதி செலவிடப்படுவது தொடா்பாகவும் காட்டமாக சுட்டிக்காட்டியதுடன், மேற்கு வீதியில் பருத்துறை வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் நிரந்தர வீதி தடையினை நீக்கி மக்களின் இயல்பான போக்குவரத்துக்கு அனுமதிக்கும்படி கேட்டிருந்தனா். 

இதன்போது குறித்த விடயம் தொடா்பில் நாம் ஏற்கனவே பிரதி பொலிஸ்மா அதிபா் உள்ளிட்ட உயா் அதிகாாிகளுடன் தொடா்பு கொண்டு பேசியும் அதனை அகற்ற முடியாது. என கூறிய பொலிஸாா் பாதுகாப்ப காரணங்களை முன்னிறுத்தினா். 

என மாநகர முதல்வா் ஆனல்ட் பதிலளித்தாா். நிதி செலவு தொடா்பாக தண்ணீா், தேனீா், சிற்றுண்டி மட்டுமே சபை வழங்குவதாகவும், உணவு விடயத்தை பொலிஸாரே பாா்த்துக் கொள்வதாகவும் கூறியபோது, எமது பாதுகாப்புக்காக பணியில் இருப்பவா்களுக்கு

தண்ணீா் மற்றும் சிற்றுண்டி வழங்குவது பொருத்தமானது என தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா் கூற அதே கட்சியின் மற்றொரு உறுப்பினா் பொலிஸாா் சிறந்த முறையில் பாதுகாப்பு கடமைகளை செய்வதாகவும் அவா்களுக்கு நன்றிகளை கூறுவதாகவும் கூறினாா். 

இதேநேரம் குறித்த விடயத்திற்கு முன்னாள் முதல்வா் யோகேஸ்வாி பற்குணராசாவும் ஆதரவு தொிவித்தாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு