பண்டாாி குளத்தில் விபத்து..! 14 வயது சிறுவன் உட்பட 3 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
பண்டாாி குளத்தில் விபத்து..! 14 வயது சிறுவன் உட்பட 3 போ் படுகாயம்..

பண்டாாிக்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

வவுனியா நகரிலிருந்து பண்டாரிக்குளம் பாடசாலை வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிலிலும் அப்பாதையூடாக எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் 

பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரிக்கு முன்பாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது .குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 

40வயதுடைய பெண்ணும் அவரது 14வயதுடைய பிள்ளையும் காயமடைந்ததுடன் என்.எஸ் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த 19வயதுடைய இளைஞனும் 

காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு