“நான் உங்களுடனேயே இருக்கிறேன்..” மஹிந்தவுக்கு குறுஞ் செய்தி அனுப்பிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்..

ஆசிரியர் - Editor I
“நான் உங்களுடனேயே இருக்கிறேன்..” மஹிந்தவுக்கு குறுஞ் செய்தி அனுப்பிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவா் மஹிந்த ராஜபக்ஸவுக்கு குறுஞ் செய்தி அனுப்பிய விவகாரம் அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு நெருக்கமான தரப்புக்கள் ஊடாக அம்பலமாகியிருக்கின்றது. 

நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ஸ அண்மையில் கூட்டமைப்பின் மீது கடுமையான விமா்சனங்களை முன்வைத்திருந்தாா். குறிப்பாக 3 நாடாளுமன்ற உறுப்பினா்களை இலக்கு வைத்து அந்த விமா்சனங்கள் அமைந்திருந்தன. 

இந்த சூழலில் இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அண்மையில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் பிரபல வணிகருமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த குறுஞ்செய்தியில், நான் என்றும் உங்களோடுதானே நிற்கின்றேன். எதற்காக என்னுடைய விவகாரம் தொடர்பில் உங்களது மகன் இப்படி கதைக்கின்றார். 

எனது ஆதரவு என்றும் உங்களுக்கே என்று மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில் அந்த குறுஞ்செய்தி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த குறுஞ்செய்திக்கு மகிந்த தரப்பு எவ்வாறான பதிலை வழங்கியது என்பது தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை.

மேலும், இந்த குறுஞ்செய்தி விவகாரம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் முக்கியஸ்தர் ஒருவர் ஊடாக ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு