அண்ணன் தம்பிக்கிடையில் சண்டை..! விலக்கு பிடிக்கபோன அம்மம்மா கத்தி குத்தில் உயிாிழப்பு, 16 வயது சிறுவன் கைது..

ஆசிரியர் - Editor I
அண்ணன் தம்பிக்கிடையில் சண்டை..! விலக்கு பிடிக்கபோன அம்மம்மா கத்தி குத்தில் உயிாிழப்பு, 16 வயது சிறுவன் கைது..

சகோதரா்களுக்கிடையில் நடந்த சண்டையில் விலக்கு பிடிப்பதற்காக சென்ற அம்மம்மா கத்திக்குத்துக்கு இலக்காகி உயிாிழந்த சம்பவம் வெற்றிலைக்கேணி முள்ளியான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்றய தினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே பகுதியை சு.கங்கேஸ்வாி (வயது72) என்பவா் உயிாிழந்துள்ளாா். இதேவேளை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

வீட்டில் மூத்த சகோதரரும் இளைய சகோதரனுக்கும் இடையே மோதல் இடம்பெற்றது. அதனைத் தடுப்பதற்கு அவர்களது அம்மம்மா முயற்சித்துள்ளார். அப்போது மூத்த சகோதரனுக்கு கத்தியால் குத்துவதற்கு 

இளைய சகோதரன் முயன்ற போது கத்தி அம்மம்மாவின் நெஞ்சில் பாய்ந்தது. அம்மம்மாவுக்கு கத்தியால் குத்தியதையடுத்து பதற்றமடைந்த சகோதரர்கள் அவரை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். 

எனினும் அவரின் உயிர் வழியில் பிரிந்தது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 16 வயதுடைய சுபாஷ் சசிகரன் என்ற மாணவனைக் கைது செய்தனர். மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு